சி.வை.தாமோதரம்பிள்ளை

தொல்காப்பியத்தைத் தேடிக் கண்டு பிடித்து நமக்களித்தவர், ஈழத் தமிழர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள்

பண்டைய சங்கத் தமிழ் காப்பியங்களின் ஓலைச் சுவடிகள் கறையான் தின்று அழிந்து போகாது, தனது கடின உழைப்பால் தேடி அவற்றை மீட்டு, படித்து, படியெடுத்து, ஒப்பிட்டு ஆய்வு செய்து அனைவரும் பயன் பெறும் வகையில் அவற்றை அச்சிட்டு வெளியிட்டவர்
சி.வை.தாமோதரம்பிள்ளை ஆவார்.

1832 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாள் யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார்.

சார்லஸ் வினஸ்லோ கிங்ஸ்பரி (Charles Winslow Kingsbury) என்பது இவரது இயற்பெயர். தமிழ் மீது கொண்ட காதலால் மீண்டும் சைவ சமயத்திற்கு மாறி தேவாரம் திருவாசகம் பயின்றார்.
தன் பெயரை சி.வை.தாமோதரம்பிள்ளை என்று மாற்றிக் கொண்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த சி.வை.தாமோதரம்பிள்ளை சிலகாலம், புதுக்கோட்டையிலும் வாழ்ந்தார்.

1853 ஆம் ஆண்டு நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறித் தமிழ் நூலைப் பதிப்பித்து புத்தக வெளியீட்டுத் துறையில் முன்னோடி எனும் பெருமையையும் பெற்றார்.

இவர், யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை ( தற்போதைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ) அதிபராக இருந்த பீட்டர் பெர்சிவல் பாதிரியார் தமிழ் நாட்டில் நடத்தி வந்த தின வர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853 ஆம் ஆண்டு சென்னை வந்தார்.

அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் கடமையாற்றினார்.

1858 இல் சென்னை பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார்.

பின்பு தமிழ் நாட்டில், கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியரானார்.

அதன்பின் அரசாங்க வரவு செலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளரானார்.
தொடர்ந்து சட்டம் பயின்ற அவர், 1871 இல் ‘பி.எல்.’ தேர்வில் வெற்றி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

1884 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளைக்கு 1895 ஆம் ஆண்டு ராவ் பகதூர் பட்டமளித்தது பாராட்டினர் அரசினர்.

பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரத்தை அவர் தனது கடும் உழைப்பினால் தேடிக் கண்டுபிடித்து, அதனை அச்சிட்டு வெளியிட்டபோது அதனை வியந்து பாராட்டாதோர் எவரும் இல்லை.

செயற்கரிய செயல்கள் பல புரிந்த தாமோதரம்பிள்ளை தமது அறுபத்து ஒன்பதாம் வயதில், 1901 சனவரி 1ஆம் நாள் சென்னை புரசைவாக்கத்தில் காலமானார்.

சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்பித்த நூல்கள்….

  1. நீதிநெறி விளக்கவுரை
  2. தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (1868)
  3. வீரசோழியம் (1881)
  4. திருத்தணிகைப் புராணம்
  5. இறையனார் அகப்பொருள்
  6. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை
  7. கலித்தொகை
    இலக்கண விளக்கம்
    சூளாமணி
    தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை
    இயற்றிய நூல்கள் [தொகு]
    கட்டளைக் கலித்துறை
    சைவ மகத்துவம்
    வசன சூளாமணி
    நட்சத்திர மாலை
    ஆறாம் வாசகப் புத்தகம்
    ஏழாம் வாசகப் புத்தகம்
    ஆதியாகம கீர்த்தனம்
    விவிலிய விரோதம்
    காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)

உ வே சாமிநாதன் அவர்கள் சி.வை. தாமோதரம்பிள்ளை காலமானபொழுது எழுதிய இரங்கற்பா

“தொல்காப் பியமுதலாந்த தொன்னூல் களைப் பதிப்பித்து
ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின் – அல்காத
தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை
யாமோ தரமியம்ப வே”
நீடிய சீர்பெறு தாமோதர மன்ன, நீள்புவியில் –
வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புற நீ –
பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான்
கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறலரிதே!”

தொல்காப்பியத்தை அனைவரும் அறியும் வண்ணம் அச்சிட்டு வெளிப்படுத்தியவர் இவர் என்ற புகழுக்கு உரியவர்.

ஸ்ரீ ரசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *