EVM மிஷின் மூலம் எப்படியெல்லாம் பாஜக அரசு தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் முறைகேடுகளை செய்யவுள்ளது என்று பல தேர்தலுக்கு முன்னும் .. எப்படி முறைகேடுகளை தொடர்ந்து செய்தது என்று பல தேர்தலுக்கு பின்னும்..

நீங்கள் சென்னை பிரஸ் கிளப் மற்றும் தொலைக்காட்சியில் // இணையத்தில் // எல்லா மீடியாவிலும்.. கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே கடந்த மூன்றாண்டுகளாக தினம் தினம் விளக்கமாகா பேசி வருகின்றீர்கள்..

EVM மிஷின் மூலம்…

எப்படி ஹேக் செய்கிறார்கள் …

எப்படி ஹேச்சிங் செய்கிறார்கள்..

Symbol #Loding #System மூலம் எப்படி முறைகேடுகளை செய்கிறார்கள்..

அழியாத லேசர் பிரிண்டர்களுக்கு பதிலாக அழியும் தெர்மல் பிரிண்ட்களை ஏன தேர்தல் ஆணையம் வாங்கியது..??

நாம் EVM மிஷினால் வாக்கு செலுத்தி பிரிண்ட் ஆகும் தெர்மல் பிரிண்ட்டையும் எண்ணி … EVM மிஷினையும் எண்ணி இரண்டும் ஒரே மாதிரி எண்ணிக்கையில் இருக்கின்றதா என்று பார்ப்பதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பது ஏன்..??

தேவைக்கு அதிகமாக 3 லட்சம் EVM மிஷின் வாங்க வேண்டிய அவசியம் என்ன..??

புதிதாக வாங்கிய EVM மிஷினில் 2 லட்சம் மிஷின் சர்வீஸ்க்காக ஏன் போனது..??

அப்படி புதிய மிஷின்களில் என்ன பிரச்சனை இருந்தது.. சாப்ட்வேரா..?? ஹார்ட்வேரா..??

பல வட இந்திய மாநில தேர்தல்களில் வாக்கு பதிவு செய்யப்பட்ட EVM மிஷின் பாஜக ஆதரவாளர்கள் வசம் இருந்தது எப்படி…?

இந்திய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் மூவரில் ராகுல்காந்தியை நீக்கி விட்டு ஒரு மத்திய அமைச்சரை சேர்த்தது ஏன்..?

தேர்தல் ஆணையர் மீது வழக்கு போட முடியாத அளவிற்கு பாஜக சட்டம் இயற்றியது ஏன்..?

தேர்தல் ஆணையம் தெர்மல் பிரிண்ட்டை 45 நாளில் அழிப்பது ஏன்..?

சிசிடிவி கேமரா ஆதாரத்தினை தர மறுப்பது ஏன்…?

பல மாநிலங்களில் கடைசி ஒரு நேரத்தில் மட்டும் பூத்துகளில் 5% – 10% வாக்குகள் பதிவானது எப்படி..??

வாக்கு பதிவு முடிந்து அடுத்த இரண்டு நாள் கழித்து 5% – 7% அதிகரிப்பது எப்படி..??

S.I.R.மூலம் 90 லட்சம் பேர் நீக்கத்தின் பின்னணி..

வட மாநிலத்தினர் 40 லட்சம் பேர் சேர்ப்பு..

நம் EVM மிஷினில் எந்த மாதிரி சாப்ட்வேர் உபயோகிக்கப்படுகின்றது..?

EVM மிஷினை கண்டுப்பிடித்த மற்றும் தயாரிக்கும் ஜப்பான் தனது நாட்டில் வாக்கு சீட்டு முறையைதான் பயன்படுத்துவது குறித்தும்..

நவீன அறிவியல் புரட்சி நாடுகளான அமெரிக்கா இஸ்ரேல் ஜெர்மனி தென்கொரியா போன்ற நாடுகளே EVM மிஷினை பயன்படுத்தாது குறித்தும்..

EVM மிஷினில் தில்லுமுல்லுகளை செய்ய முடியும் எலான் மஸ்க் போன்றவர்கள் சொன்னது பற்றியும்..

தேர்தல் ஆணையர் ஞானசேகரன் அமித்ஷாவிடம் இருந்தவர் என்பது பற்றியும்..

இது போக … கர்நாடாக தேர்தலில்..
ஒரு வீட்டில் 900 ஓட்டு
வீட்டு முகவரி “0”
அப்பா பெயர் ABCD
ஒருவருக்கு 20 ஓட்டு..
அப்பா வயது 30 மகன் வயது 50
இறந்தவர்களுடன் டீ சாப்பிட்டது
வெளிநாட்டு அழகி 24 இடத்தில் ஓட்டு போட்டது.. என ராகுல் காந்தி பல முறைகேடூகளை அம்பலப்படுத்தியது உட்பட ….

சென்னையில் ஒரு தொகுதியில் உள்ள பல ஆயிரம் வாக்காளர்களை பீகாரில் ஒரு கால் சென்டரில் இருந்து கொண்டே நீக்கியது..

இப்படி தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு சாதகமாக செய்த செய்து கொண்டிருக்கின்ற செய்யவுள்ள என அனைத்து பித்தாலாட்டங்களையும் கடந்த 30 மாதமாக நீங்கள் ஆதாரத்துடன் சொன்னீர்கள்…

தேர்தல் ஆணையரின் பாஜக ஆதரவு நிலைப்பாடும்.. தேர்தல் பிரச்சாரங்களில் மோடி அமித்ஷா யோகி போன்று நாடு முழுவதும் உள்ள பாஜக தலைவர்களின் அத்துமீறிய மதம் இனம் மொழி துவேஷ பிரச்சாரங்கள் குறித்தும்..

தேர்தல் நேரத்தில் மற்றும் வாக்கு எண்ணிக்கை நேரத்தில் அதிகாரிகளை கலெக்டர்களை அமித்ஷா நேரடியாக மிரட்டியது குறித்தும்..

இதையெல்லாம் ராகுல்காந்தி உட்பட பலர் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு போயிருந்தும் கூட நீதி கிடைக்காதது குறித்தும்.. நீதிபதிகளே பாஜகவிற்கு ஆதரவாக இருப்பது குறித்தும்..

இதையெல்லாம் தடுக்க… பாஜகவை எதிர்க்கும் அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் வாகனங்களை ரோட்டில் நிறுத்தி… #இந்தியாவை #ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்று பல பல தடவை நீங்கள் பேசியும்…

இதில் காங்கிரஸ் உட்பட தேசிய கட்சிகளும்..
திமுக உட்பட பல மாநில கட்சிகளும் அமைதி காத்ததின் விளைவு…

அமித்ஷாவை சாதாரணமாக எடை போடாதீர்கள் .. பீகாரை போல் தமிழகத்தினையும் சதி செய்து கைப்பற்றுவார்கள் என்று நீங்கள் பலமுறை படித்து படித்து எச்சரிக்கை விடுத்ததை இரு திராவிட கட்சிகளும் அலட்சியப்படுத்தியதின் விளைவுகளை இன்று பார்க்கின்றார்கள்..

நேற்று உத்திரபிரதேசம் // ராஜஸ்தான் // மகாராஷ்டிரா // ஹரியானா // டெல்லி // பீகார் // மாநிலங்களில் வரிசையில் இன்று தமிழ்நாடும் பாஜக ஆர்எஸ்எஸ் மதவாத சக்தியிடம் சூழ்ச்சியில் வீழ்ந்து விட்டது போல் தெரியுது..

தமிழக இளைஞர்கள் ஒன்றிணைந்து அறிவார்ந்த தமிழகத்தினையும் இந்தியாவையும் கட்டமைப்பார்கள் என்று ஜல்லிக்கட்டு புரட்சியின் போது நீங்கள் பேசினீர்கள்.. இளைஞர்கள் காலம் புத்தகத்தில் கலாம் அவர்களுடன் இணைந்து இந்த கருத்தை எழுதினீர்கள்..

ஆனால் இன்று தமிழகம் ஒரு தகுதியில்லாத ஒரு தற்குறியின் கையில் சிக்கிவிட்டது போல் தோன்றுகிறது..

மீள்வதற்கு என்ன வழி..??

தேசமும் தமிழகமும் எப்பொழுதுதான் மீளும்…??

உங்களின் அடுத்த நடவடிக்கையை அறியவும்… இணைந்து பயணிக்கவும்… அறிவார்ந்த இளைஞர்கள் பலர் என்றும் உங்கள் பின் தயாராகவே உள்ளார்கள்…


கலாமின் குரல்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *